மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று(15) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
பார்வையிழந்தவர்களுக்கென சில விசேட தொழிநுட்ப வசதிகளை ஏற்பாடு செய்வது, வாக்களிப்பு நிலையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றாற்போல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.