மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு இருந்த சட்ட நிலைமை தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு கோப் குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
குறித்த அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகளை நேற்று(22) கோப் குழு முன் அழைத்ததாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.