மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்துஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஒழுங்கு செய்துள்ள நாடுதழுவிய சேவைப் புறக்கணிப்பு இன்று(05) நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்துக்கு 121 தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 250க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டமளிக்கும் நிறுவனமாக மாலபே மருத்துவ கல்லூரியை அங்கீகரித்துள்ளமைக்கு எதிராகவும், அதனை கலைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.