இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவின் மனைவி தான்யா பெரேராவின் முகநூல் பதிவானது சமூக வலையத் தளங்களில் அதிகளவு பேசப்படுகின்றது.
தான்யா பெரேரா கடந்த 21ம் திகதி அவரது முகநூல் பக்கத்தில், “விளையாட்டு அமைச்சர் பதவியினை பெற்று வீட்டுக்கு வர, புடவை அணிந்த.. மிகத் திறமையாளர் என கூறித் திரியும் வீரர் ஒருவர் இடத்தினை தக்க வைக்க வீட்டு சென்றார்…” என கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த புகைப்படத்துடன் கூடிய பதிவில் “Poor Pandas” என சேர்க்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இலங்கை அணியில் “Panda” என புனைப் பெயரில் கூறுவது திசர பெரேராவுக்கே என்பதும் விசேடமானது.
பின்னர் குறித்த “Panda”எனும் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
திசர பெரேரா மற்றும் இந்நாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இருவரும் கொழும்பு- சாந்த ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
