மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 169 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் இன்று(24) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.