மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு…

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நேற்றிரவு(27) 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊ்டக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இனந்தெரியாத நபரொருவரால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் 25 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.