மாவனல்லை பிரதேச சபை கூட்டத்தை நடத்த தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவனல்லை பிரதேச சபை கூட்டத்தை நடத்த 07 நாட்களுக்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில், மாவனல்லை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தை நடத்தப்படவுள்ளதாக கிடைத்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸாரினால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.