வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார் மிச்செல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பான வாய்மூலமான விடயங்களை இன்று (27) முன்வைக்கவுள்ளார்.

அது தொடர்பில் உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன.

மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூலமான முன்வைப்புகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்க உள்ளார்.

இதேநேரம், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நாளையதினம் (28) வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சந்திக்க உள்ளார்.