நுவரெலியா, வலப்பனை கலங்கவத்தை பிரதேசத்தில் மினசாரம் தாக்கி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கருகில் உள்ள விவசாய பண்ணையொன்றில் வைத்தே மினசாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மினசாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.
கலங்கவத்தை உடகாவல பிரதேசத்தை சேர்நத 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.