மினுவாங்கொட – யகட்டுவ பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் சுமார் 100 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.