மின்சார புனரமைப்பு காரணமாக சில பகுதிகளுக்கு மின்வெட்டு அமுலில்…

மின்சார புனரமைப்பு மற்றும் பராமரிப்பு செயற்திட்டங்கள் காரணமாக வடக்கின் சில பகுதிகளுக்கு இன்று(22) மின்சாரத் தடை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவிக்கையில்;

குறித்த மின்வெட்டு யாழ்ப்பாணம் மருதங்கேணி, உடுத்துறை, வத்திராயன், ஆழியவளை வெற்றிலைக்கேணி, கொடுக்குழாய், இராணுவ முகாம், கட்டைக்காடு போன்ற பகுதிகளில் காலை 8.30 முதல் மாலை 5.00 மணி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

 

#reeshma