மின்சார விநியோகம் வழமைக்கு…

(FASTNEWS|COLOMBO) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின், திருத்தப்பட்ட இரண்டாவது மின்பிறப்பாக்கி, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் இன்று முதல் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும்  என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், இரண்டாவது மின்பிறப்பாக்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.