மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – அமைச்சர் ரஞ்சித்

நேற்று நள்ளிரவு முதல் மார்ச் 31ம் திகதி வரை மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக வௌியான செய்திகள் தவறானது என, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

முன்னர் அவ்வாறானதொரு திட்டம் இருந்த போதும், தற்போது மின் உற்பத்தி நிலையப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மின் விநியோகத்தை தடையின்றி வழங்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நேற்றைய தினத்தில் அவிஸ்ஸாவல்ல பகுதிகளில் மின்வெட்டு அமுலில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.