(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
மின்சார கட்டண உயர்வு தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மின்சாரக் கட்டணங்கள் 75% அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதால் பொதுமக்களின் துன்பங்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
மின்சாரக் கட்டண உயர்வால் குறைந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில் கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
கட்டண உயர்வை அரசாங்கம் மீள் மதிப்பீடு செய்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.