மின் விநியோக பாதைகளின் பராமரிப்பு வேலைகளுக்காக மின்தடை அமுலுக்கு..

கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோக பாதைகளின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக குறித்த இந்த மின்சார தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5..00 மணி வரை கிளிநொச்சியின் கெளதாரிமுனைப் பகுதியிலும், காலை 9..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மன்னார் மாவட்டத்தின் நாகதாழ்வு பகுதியிலும் மின்சாரம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.

 

(rizmira)