இலங்கையிலுள்ள மியன்மார் அகதிகள் மீது நடந்த பிக்குகளின் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் நேற்று(28) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் திருத்தப்படாத காட்சிகளை ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.
(rizmira)