மியன்மார் மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலனை…

மியன்மாரில் ரொக்கின் பிராந்தியத்தில் ​ரோஹிங்யா மக்கள் நடத்தப்படும் விதம் காரணமாக, மியான்மரில் உள்ள தனது இராணுவ உதவிக் குழுக்களை அமெரிக்கா திரும்பப் பெருகிறது.

மியன்மார் இராணுவ அதிகாரிகளுக்கான பயண சலுகை முறையை நிறுத்தியுள்ளதாகவும், பொருளாதார தடை குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

சுமார் 10 லட்சம் ரோஹிங்யாக்கள், மியன்மாரில் இருந்து தப்பி பங்களாதேஷிற்கு வந்துள்ளதாக, ஐ.நாவுக்கான பங்களாதேஷப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.