மிளகு அறுவடையை முற்றாக கொள்வனவு செய்வதற்கு அரசு நடவடிக்கை..

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் மிளகு அறுவடையை முற்றாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் மிளகின் விலை குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இதனை பயன்படுத்தி சிலர் இலாபம் ஈட்ட முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனால் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களில் ஏமாந்து விடாமல், மிளகு அறுவடையை தம்வசம் வைத்திருக்குமாறு அமைச்சர் மிளகு உற்பத்தியாளர்களிடம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

(rizmira)