மிஸ்பாவின் கார் பறிமுதல்

பாகிஸ்தான் அணிக்கு நீண்ட காலமாக கப்டனாக பணியாற்றியவர் மிஸ்பா உல்–ஹக்.

இவர் தனது விலை உயர்ந்த காருக்கு வரி செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளார். அவர் ரூ.3.9 லட்சம் செலுத்த வேண்டும்.

வரி செலுத்தாததால் மிஸ்பாவின் விலை உயர்ந்த காரை அந்நாட்டு வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.