(FASTNEWS |COLOMBO) – நாட்டில் இதுவரையில் மீட்கப்பட்ட போதைப் பொருட்களில் 1000 கிலோ கிராம் போதைப் பொருளை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட விதிமுறைகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
இதேவேளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினூடாக போதைப் பொருட்களை அழிப்பதற்கான விஞ்ஞான ரீதியான முறைமை குறித்து கலந்துரையாடப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்தகுமார கித்தலவாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.