மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவின் காரணமாக சேதமடைந்த வாகனங்களுக்காக இழப்பீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தலைமையில் இன்று(19) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.