மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணை விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.