மீறினால் முடக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்கு சில விதிமுறைகைள அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்களின்போது நடைபெறும் வெறுக்கத்தக்க பேச்சுக்களைத் தவிர்ப்பதற்காக இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை சமூக வலைதளங்கள் கண்டித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது