எதிர்வரும் மார்ச் மாதம் ஹாங்காங்கில் ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடருக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளார்.
அதனடிப்படையில் , அவர் கயிடாக் அணிக்காக விளையாடவுள்ளார்.
அதேபோல் , இந்த போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சைட் அப்ரிடி மற்றும் மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.