2018 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும் என்பதுடன், இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.