(FASTNEWS |COLOMBO) – அரசு அதிகாரிகளின் சோதனையின் போது முகத்தை காட்ட மறுக்கும் பெண்களுக்காக புதிய சட்டத்தினை ஜேர்மன் அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனில் புலம்பெயர்வு, சுங்க அல்லது சமூக பாதுகாப்பு, ரயில் மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளிடம் முகத்தை காட்ட மறுக்கும் பெண்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.