முகநூல் பதிவு காரணமாக உதவி போக்குவரத்து முகாமையாளரொருவர் கைது…

(FASTGOSSIP | COLOMBO) – தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் தெற்கு அதிவேக பாதை களனிகம செயற்பாட்டு மத்திய நிலையத்தின் உதவி போக்குவரத்து முகாமையாளரொருவர் பண்டாரகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் முகநூலில் பதிவு செய்திருந்த பதிவு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளதோடு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.