முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |இந்தியா) –   நிர்பயா வழக்கின்  முக்கிய  குற்றவாளியான முகேஷ் சிங்கின் கருணை மனுவை இந்திய  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 

மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பேருந்தில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

நிர்பயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ஆம் திகதி காலை 7 மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.