ஜூன் மாதம் 13ம் திகதி தொடக்கம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் போது விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாக வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய மன்றம் தெரிவித்துள்ளது.
சாரதி என்ற ரீதியில் வீதியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து குறித்த செயலமர்வில் முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு தெளிவுபடுத்த உள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.