முச்சக்கர வண்டி உரிமையாளர்களது ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்..

முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த வீதியின், நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில், ரயில் கடவைக்கு அருகில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாலை விதிகளை மீறுவோருக்கு எதிரான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.