முச்சக்கர வண்டிக்கான மீட்டர் பொருத்தி, பற்றுச் சீட்டு வழங்கும் படி அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ள சட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதுகுறித்து தெரிவிக்கையில்;
அரசாங்கம் வெளியிட்டுள்ள மேற்குறித்த வர்த்தமானி அறிவிப்புக்கு பல முச்சகர வண்டி சங்கங்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்ற போதிலும் குறித்த முறைமை வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
(rizmira)