2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றினை போக்குவரத்து அமைச்சின் கீழ் உருவாக்கப் உள்ளதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மேலும், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கு, வழிகாட்டல் பயிற்சி அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு “டுக் டுக்” என்ற இலட்சனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.