முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகள் இன்று(17)…

2019ம் கல்வியாண்டிற்கு முதலாம் தரத்திற்கான மாணவர்கள் இன்று(17) பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.

இதற்கான தேசிய வைபவம், கிரிவுல்ல கனேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 10,194 பாடசாலைகளில், 9,193 பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் இயங்குகின்றன.

இந்நிலையில், வருடாந்தம் 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் முதலாம் தரத்திற்காக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.