முதலிடம் பிடித்த நயன்தாரா

சமீ­பத்தில் ஆங்­கில பத்­தி­ரிகை ஒன்று தென் இந்­திய நடி­கை­களில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்­துக்­கணிப்பை ரசி­கர்­க­ளிடம் நடத்­தி­யது.

இதில் நயன்­தாரா முதல் இடத்தை பிடித்­துள்ளார்.

திரை உலகில் கதா­நா­ய­கி­யாக அடி­யெ­டுத்து வைப்­ப­வர்கள் எல்­லோரும் ஜெயிப்­பதில்லை.

ஹீரோயின் ஆன­வர்கள் அனை­வ­ருக்கும் தொடர்ந்து வாய்ப்­புகள் வரு­வ­தில்லை. வந்­தாலும் ஒரு சில ஆண்­டு­களில் ரசி­கர்கள் அவர்­களை மறந்து விடு­வார்கள்.

இந்த வரம்­புகள் அனைத்­தையும் உடைத்து எறிந்து 10 ஆண்­டு­களுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு, மலை­யாள பட உலகில் கொடி கட்டி பறப்­பவர் நயன்­தாரா.

‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறி­மு­க­மான இவர், தமிழ் பட உலகின் முன்­னணி நாய­கர்கள் அனை­வ­ரு­டனும் ஜோடி சேர்ந்து நடித்­துள்ளார்.

தெலுங்கு, மலை­யா­ளத்­திலும் முன்­னணி நடிகை ஆனார். நயன்­தாரா நடித்தால் அந்த படம் நிச்­சயம் வெற்றி பெறும் என்று திரை யுல­கினர் இவரை சுற்றி வரும் நிலை இப்­போதுள்­ளது.

இப்­போது கருத்து கணிப்­பிலும் தென் இந்­திய நடி­கை­களில் முதலிடத்தை பிடித்­தி­ருக்­கிறார்.

2013 இல் நடத்­திய கருத்­துக்­க­ணிப்பில் தென் இந்­திய நடி­கை­களில் 7 ஆவது இடத்தில் இருந்த நயன்­தாரா இப்­போது முதல் இடத்­துக்கு வந்­தி­ருக்­கிறார்.

அவ­ரது அழகு, நடிப்பு, திறமை அனைத்­தையும் விரும்­பு­வ­தாக கருத்­துக்­க­ணிப்பில் பங்­கேற்ற ரசி­கர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.

2 ஆவது இடம் ஸ்ரு­தி­ஹா­ச­னுக்கு கிடைத்­தி­ருக்­கி­றது. 3 ஆவது இடத்தை எமி­ஜாக்­சனும், 4 ஆவது 5 ஆவது இடங்களை அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் பிடித்திருக்கிறார்கள்.

அடுத்தடுத்த இடங்களில் த்ரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட மற்ற நாயகிகள் உள்ளனர்