முதல்வர் ஜெயலிதாவுக்கு நேற்று(04) மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்துள்ளது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கிரிம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் திகதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரையில் அவரது உடல் நலம் பற்றிய கால அட்டவணை இது.
