மல்வானை பகுதியில் காணியொன்று கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிர்வரும் மே மதம் 03 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ குறித்த இந்த அழைப்பாணையை இன்று(14) விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பண மோசடி சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் மேற்கொண்டுள்ள வழக்குக்கு அமையவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.