தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலை தூக்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 07ம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்ததினை தொடர்ந்து குறித்த வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.