முன்னாள் ஜனாதிபதியின் காரியாலய அருகில் சந்தேக நபரொருவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பத்தரமுல்லையில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு அருகில் சந்தேகத்தின்பேரில் நடமாடியதாக கூறப்படும் நபரொருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினாலேயே சந்தேகநபரை கைது செய்து தலங்கம பொலிசில் ஒப்படைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.