முன்னாள் ஜனாதிபதியின் சிவில் உரிமையினை நீக்குமாறு பரிந்துரை – பிரதமர்…

பாரிய இலஞ்ச ஊழல் விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமையினை நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் (27) மொரவக்க பிரதேசத்தில் மக்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

“..இந்த அறிக்கைகள் இரண்டில், ஒன்று பிணை முறி குறித்த விசாரணை அறிக்கை.குறித்த பிணை முறி அறிக்கை குறித்து நான் புதிதாக கூற விரும்பவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது எமக்கோ எதிராக குறித்த அறிக்கையில் எவ்வித முறைப்பாடுகளும் இல்லை.. அது குறித்து ஒரு தடவை அல்ல மூன்று நான்கு தடவைகள் பாளுமன்ரில் விவாதித்துள்ளோம்.. எமக்கு மறைக்க எதுவுமில்லை.. எமக்கு கால்துடைப்பத்தின் கீழ் போட எதுவுமில்லை.. அதில் ஒரு அறிக்கையில் யோசனையாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமை 07 வருடங்கள் இன்றி வாழ்நாள் பூராகவும் நீக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ளது….”

#rishma