முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாகன பயன்பாட்டு மோசடி தொடர்பான விசாரணைக்காகவே அவர் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சுமார் 150 வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் வேறு நபர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.