முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனை எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து விபரங்களை வெளியிட மறுத்ததன் மூலம், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
குறித்த இந்த வழக்கு விசாரணையின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்களை விசாரிப்பதற்காகவே பி.பீ.அபேகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.