முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் ஜனாதிபதியும் சஜித்திற்கு ஆதரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரளவிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

சிங்கள இணையத்தளம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில்,கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க பங்கேற்றிருந்தார்.

அண்மைகாலமாக சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிகக்கும் இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதில் மங்கள, சந்திரிக்கா இருவரும் முக்கிய வகிபாகம் வகிக்கின்றனர்.