முன்னாள் ஜனாதிபதி சீனா நோக்கிப் பயணித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(23) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் செல்லும் அவர், டிசம்பர் முதலாம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிய வந்துள்ளது.

இதன்போது அந்நாட்டு தலைவர்களை மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதோடு, பல்வேறு சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியுடன் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் லோஹான் ரத்வத்தை உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.