கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் இருந்து பெற்று கொள்ளப்பட்ட பேருந்துகளுக்காக செலுத்த வேண்டிய ரூபாய் 142 மில்லியனை செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இன்று(28) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் குரித்தா இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது வழக்கின் பிரதிவாதிகளின் எதிர்ப்பை தாக்கல் செய்வதற்காக மே மாதம் 23 ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.