முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு நேற்று(02) குறிப்பிட்டுள்ளது.
அதற்கிணங்க, இதுதொடர்பிலான அறிவித்தலை அவருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்களை சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து வருவதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டது.
கொழும்பு – கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபலசேனா தலைமையகத்தில் நேற்று(02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அதன் தேசிய அமைப்பாளரான டிலாந்த விதானகே மேற்கண்டவாறு கூறினார்.
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தினால் தமது அமைப்புக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.