நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கானது எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி வரையில் ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் இன்று(07) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகளில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசரான பிரியந்த ஜெயவர்த்தன விலகியுள்ளதாகவும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.