முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா மா அதிபருக்கு எதிரான மனு விசாரணைக்கான தினம் குறிப்பு..

(FASTNEWS| COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் இன்று(03) தீர்மானித்தது.

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் தற்கொலை குண்டுத்தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர்களுக்கு எதிராக இந்த மனு வர்த்தகரொருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.