முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி முகவரகம் (ராடா) ஊடாக வடக்கு, கிழக்கில் வீடமைப்பு திட்டங்களை அமுல் செய்வதாக கூறி 124 மில்லியன் ரூபா அரச பணத்தை மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸ் உட்பட மூவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.