முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் பிணையில் விடுவிப்பு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  டிரான் அலஸுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

புனர்­வாழ்வு மற்றும் அபி­வி­ருத்தி முக­வ­ரகம் (ராடா) ஊடாக வடக்கு, கிழக்கில் வீட­மைப்பு திட்­டங்­களை அமுல் செய்­வ­தாக கூறி 124 மில்லியன் ரூபா அரச பணத்தை மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்­பி­ன­ரான டிரான் அலஸ் உட்­பட மூவர் கைது செய்யப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.