முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இன்று (25) ஐந்தாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த நிலையில் சற்று முன்னர் (இரவு 7.00) மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.