நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்தொழில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்தினவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிமன்றில் இன்று(13) அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு கடல்நீரேரி வளர்ச்சி யோசனை நடவடிக்கைக்கு வழங்கிய 112 இலட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.